Sale!

சப்த கன்னிகள்

Original price was: ₹210.00.Current price is: ₹200.00.

ஆண் நினைப்பதை மட்டும்தான் திருமணத்திற்குப் பிறகு நடத்த வேண்டுமா? பெண்ணின் கனவுகளும் ஆசைகளும் என்ன ஏது என்று கேட்கவே மாட்டார்களா?. இதற்கு எதற்கு இத்தனை பெரிய சமூக கட்டமைப்பும் அதற்கொரு அரசாங்கமும் விதிகளும். பெண்ணை விதி மீறலின் குற்றவாளி ஆக்குவதற்குத்தான். அதிலும் இந்த ஊடகங்கள், குறிப்பாக சோசியல் மீடியா படுத்தும் பாடு சொல்லி மாளாது

Description

ஆண்மை என்பது ஒரு ஆணுக்கு எப்படி உருவாகியிருக்கும். அதற்கு அர்த்தம் பெண்ணை பராமரித்து பாதுகாப்பதில் இருக்கிறதா? இல்லை அவளை அடித்துப் பேசி, திட்டி, அசிங்கமாக நடத்துவதில் இருக்கிறதா?. திருமண பந்தம் என்பது ஆண்மையை நிரூபிக்க கொடுக்கும் லைசன்ஸா என்ன? இல்லை அது குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமா?

திருமணமும் அதில் தாலி கட்டுவதும் இவர்களெல்லாம் நினைப்பதுபோல் பெண்ணை கொடுமைப் படுத்திக்கொள்ள தரும் அனுமதி போலவும் அவளை தனது இஷ்டம் போல கற்பழிக்கவும் கொடுக்கும் அனுமதியொன்றுமில்லை. அவளை கண்ணியமாக நடத்த ஒரு துப்புமில்லாமல் எதற்குத்தான் கல்யாணம் செய்து கொள்கிறார்களோ.