அழுது கொண்டே இருக்கும் குழந்தை

அழுகை என்றால்
குழந்தை தான்
ஞாபகத்திற்கு  வரும்
,
அவர்களுக்கு மட்டுமே
முழு உரிமை உண்டு
அழுக
,
அருவி போல்
கண்களில் நீர் உதிர்க்க
குதிக்காமல் ஓடி
மறைந்து விடும் துளிகள்
,
காரணம் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
,
குழந்தை ஒன்று அழுதது
என்ன செய்வது
,
காரணங்கள் கேட்டு
கண்களை மேலும்
சிவக்க வைக்க வேண்டாம்
,
மழையை வரவழைக்க
நிறுத்த பின்பு
வழியனுப்பி வைக்க
சடங்குகள் செய்வது போல்
ஏதாவது செய்யலாம்
,
நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில்
பலூன் ஒன்று
வாங்கி தரலாம்
,
நீண்ட குச்சியில்
பொம்மை மிட்டாய்
உருண்டு திரண்டு இருக்கும்
அதனை
கயிறு போல்
திரித்து பல வடிவங்கள்
கொண்ட கை கடிகாரம்
வாங்கி தரலாம்
,
மர பெட்டியில்
பீபீ ஓசையுடன்
வரும் ஐஸ் வண்டியில்
உருகி வழிந்து
ஓட
காத்திருக்கும்
பால்  ஐஸ்
வாங்கி தரலாம்
,
வட்டமான எந்திரத்தில்
ஒரு சத்தத்துடன் சுழலும்
சீனி வலைகள்
மூங்கில் குச்சியில்
தொட்டால்
சுருண்டு வந்து ஒட்டி
கொள்ளும்
பஞ்சு மிட்டாய்
வாங்கி தரலாம்
,
இவை யாவையும்
வாங்கி தராமல்
ஒரு விளையாட்டு
விளையாடியும்
நிறுத்தி விடலாம்
,
இல்லை என்றால்
மறதியே முழுநிலவு
போல் வந்து
எல்லாம் மறந்து போகும்

***

சோழன்

சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். சொல்வனம், மயிர், பூபாளம் மற்றும் காற்றுவெளி இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன.  சொல்வனம், மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *