மிதக்கும் நிலவொளியில்

காய்கிறது பனை

பசியாறிப் பழமை பேசும்

கிழப் பருந்து

கூட்டின் அடியில்

என் தெரு

சிறுத்து தெரிகிறது

,

கூனிப் பழகிய

குடியானவன் குலங்கள்

பரிணாம வளர்ச்சிக்கு

குறுக்கு நிமிர்ந்த

நிழற்படங்கள்

,

வேறு விதமாக..

கணைத்துக் கொண்டனர்

அறுபட்டுக் கத்தும்

ஆட்டினொலி போலில்லை

இன்னமும் அயலூராரிடம்

என்னாளுக என்கிறார்கள்

,

தன் சுயங்களை

தத்துவத்தை இத்துப்போன

முப்பாட்டன் சரித்திரத்தை

சமத்துவமென

ஒலிவாங்கி முன்

ஒப்புக்கு

உரைத்து அமர்கிறார்

,

ஐயா… சாமி…

அண்ணன் ஆனதும்

அலறல்….

ஒதுக்கி வைத்தோரை

உச்சாணிக்கு ஏற்றியது

ஒதுக்கீடுச் சாசனம்

,

இருந்துமவன்

இருபதாம் நூற்றாண்டின்

பட்டியலாள் தான்

இன்றும்.

000

சிவபஞ்சவன்

நிறுவனர் – யாக்கை மகிழ்வரங்கு.

நவீன நாடக இயக்குனர், நடிகர், நாடகப் பயிற்றுநர்.ஊர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம். தற்போது பல்கலைக்கழகத்தில் முதுகலை அரங்கம் மற்றும் திரைப்பட படிப்புகள் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரின் சிறுகதைகள் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *