சங்கிலியால் பூட்டப்பட்டு

கழட்டி விடப்படாத

யானையின் கால்களைப் போன்று

பூட்டியே கிடக்கும் மதகுகள்

,

கற்கள் எறியப்படாத

குளத்து நீராய்

சலனமற்று இருக்கும் மடைகள்

,

கண்கள் கட்டி

அரவமற்ற காட்டில்

விடப்பட்ட சிறு குழந்தை போல்

வழி தெரியாதிருக்கும்

கால்வாய் நீர்

,

நீரின்றி வெடிப்புற்று

கிடக்கும் நிலத்தில்

வளர்ந்து நிற்கும்

கருவேலி மரங்கள்

,

விவசாயம் மறந்து

பட்டாசுத் தொழிற்சாலையில்

அனுதினமும் தினக்கூலியாய்

வேலை பார்க்கும்

எம்மூர் மக்கள்

,

இப்படியே நீரின்றி

நிலமும் வீணாகிப் போனது

விவசாயமும்

கடந்து போனது…

                          ***

கண்ணன்.க,

தொலைந்து மீண்டவன் மற்றும் மௌனத்தின் உரிமைக்குரல் என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளேன்.

மற்ற பதிவுகள்

One thought on “கண்மாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *