அனைத்தின் பெயர்களையும்

   களைந்து எறிகிறேன்.

  இசைக்குறிப்புகளிலிருந்து சப்தங்களை மட்டும்

  தனியாக பிரிக்கிறேன்.

 ஆதவனின் மஞ்சள் கதிர்கள்

  நிர்வாண உடல் முழுதும் படர்கிறது.

  அலாதி காற்றில் துள்ளுவதின்

  பெயரென்ன?

,

அச்சு மாறாமல் பூமி சுற்றும் வரை தான்

நம் ஆட்டம் எல்லாம்.

,

 டேனிஷ் பேட்டையின்

பழைய பாலத்திற்கு அடியில்

குட்டிகளுடன் பழுப்பு நிற நாயொன்று

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது.

பயணத்தின் நொடிப்பொழுதில்

கடந்து சென்ற காட்சியென்றாலும்

கவிதைக்குள் வந்தமர்ந்து கொண்டது.

,

    ஒரு சில கவிதைகள் ஜனிக்க

    நூறு கிலோமீட்டர் தூரத்தையும்

    தாண்டிய பயணம் தேவைப்படும்

,

      ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை

     ஒழுங்கின்மை மாறாமல் ஒதுக்கி வைத்தாலே போதும்.

,

     காரணங்களின் மொழி அருவருப்பானது

     இலக்கற்ற இலக்கு நோக்கி ஏற்கனவே

     அம்பு ஏவப்பட்டுவிட்டது.

,

    உருள் பந்து

   சௌகரியங்களின் வழிகாட்டுதலில் நகர்கிறது..

    புற மற்றும் அக சௌகரியங்களின்

   வகைப்பாடுகளுக்கு இணங்க

,

   இனி எத்தனை கால      

   நித்திரைகள் மிச்சமிருக்கின்றன.

,

 வன்மத்துடன் துரத்தும் காற்று

மோதிச்சரிந்த மலையோவெனில்

உயர்ந்து நிற்கும் குப்பை மேடு.

00

சுரேசுகுமாரன்

இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *