##ஊடலின்நிறம்பிரவுன்

இளஞ்சூட்டு‌ இதயத்தின்‌

குறுக்குவெட்டு‌

தோற்றத்தில்‌

உன்

நினைவுகள்‌

தலைதுவட்டிக்கொள்கிறது.‌

தொப்புள் கொடியின்‌

உள்ளடக்கத்தில்‌

உன்பிடிவாதமும்‌

ரத்த செல்களினூடே‌

பிரவேசித்திருக்கிறது

இந்தப்பிரதேசத்தில்‌

பாதசாரிகள்‌ விழிகள்

கடக்கக்கூடாது‌

விளம்பரப்பலகை‌

சாயம் வெளுத்து‌

தலைகீழாய்‌ கண்ணடிக்கிறது

திறந்த

முதுகுவெளியில்‌

கட்சோளி

முடிச்சைப்பிடித்து‌

தொங்குகிறேன்

தொங்கும்

தோட்டம்போல‌

ஐ லவ் யூ வின்

வலசை போதல்

வதந்தியின்

விசிறல்

எனக்கும் அவளுக்கும்‌

போட்ட

தவறான‌ முடிச்சில்‌

தூய காதல்‌‌

பிசிறடிக்கிறது

டிப்பர்‌ டீ‌

“ஹாய்..தாஜ்”க்காக‌

கெட்டில்தேநீரைப்‌ பருகாமல்‌

அடம்பிடிக்கிறாய்‌.‌

சுவை‌மாறும்போது‌

உன்

அடம்பிடித்தல்‌

மிகச்சூடாயிருக்கிறது‌

நெருப்பின்‌ நிறம் போல.

‌0

சூர்யமித்திரன்

இயற்பெயர் இ.செல்வராஜ்

சொந்த ஊர் காஞ்சிபுரம்‌. ‌தற்போது வசிப்பிடம் குடியாத்தம்.

படைப்புக்குழுமத்தில் நடுவர்

திரு.பெருமாள் முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை”விருத்த சேதனம்”ஆகும்.

2018.டிசம்பரில் பாதித்த பக்கவாதத்தால் மீண்டெழுந்தவர். மூன்றுகவிதைதொகுப்புகளை2020ல்2021ல்வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *