நீ
இன்னும் அப்படியே
இருக்கிறாய்
கடுகளவு மாற்றம்
கண்களில் படவில்லை
உன்னில்
என்றான் அவன்
,
நீ
மிகவும் புதியவனாய்
இருக்கிறாய்
அதிசயிக்கத்தக்க மாற்றம்
அரங்கேறி இருக்கிறது
உன்னில்
என்றான் இவன்
,
அவனது பார்வையில்
ஒத்துப் போகிறேன்
இவனது பார்வையில்
முரண் படுகிறேன்
,
அவனுக்குப் புலப்பட்ட
ஒரு பக்கம்
இவனுக்குத் தென்படவில்லை
இவனுக்கு புலப்பட்ட
ஒரு பக்கம்
அவனுக்குத் தென்படவில்லை
,
பகுதிப் பகுதியாக என்னை
பகுத்துப் பார்த்தது
அவர்களின் பிழை
,
நான் நானாகவே
இருக்கிறேன்.
.

எனக்கு கவிதைகள் மீது மாறாத காதல் உண்டு. “இலையளவு நிழல்”
“புன்னகையின் நிறங்கள்” எனும் இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.