ஊற்றெடுத்த உற்சாகம்.

முன்பெங்கோ

பார்த்த

முகத்தின்

சாயலையொத்து இருந்ததால்

ஏற்பட்ட கரிசணமாக இருக்கலாம்

இம் முக பிரகாசத்திற்கு.

யாரின்

பிரதிபலிப்பென்பதை

வேலையின்

ஊடாக

தேடிக் கொண்டிருந்த

மனம்

இருக்கமற்று இருந்ததால்

யாவரும்

உறவினரென நினைத்திருக்கலாம்

அவர்களின்

அணுகுமுறைகளை

அவதானிக்கும்பொழுது.

ஒவ்வொரு மேஜையும்

ஒரு வித

வாஞ்சைகளுடைய

உபசரிப்பில்

வேலைகளை முடித்து கொடுத்ததற்கு

நன்றி சொல்ல

வந்து

நின்ற பெண்

யாரென தேடுவதில் அலுக்கவில்லை

மனம் உற்சாக மிகுதியில்.

பதவி அதிகாரம் மறந்து

எழுத்துவிட்ட

அசௌகரியம்

ததும்பும் கண்ணீர்

கொட்டத் தயங்கி கூப்பிய கைகளுடன் சென்றுவிட்டது அந்த பெண்

மூன்றாம் வகுப்பு

லீமா டீச்சரை

எனக்குள்

மீட்டுக் கொடுத்துவிட்டு.

எனக்குள்ளான

ஒழுங்கில்

உயிர் வாழும்

டீச்சருக்கு எதுவும்

நேர்ந்திருக்கலாம்

இந்நெடுங்கால

இடைவெளியில்.

சேகரமான

உற்சாக குடிநீரை

மணற்கேணி

தூறாமல்

மொண்டு வைத்துக்கொண்டேன்

முழநாள்

தாகத்தனிதலுக்கு

யாதொன்றும்

சிதைத்து

சிந்தை கலைக்காத வண்ணம்

பால்யத்துக்குள்

தொலைவதன் பொருட்டாக

சில பொய்யேற்பாடுகள் செய்து.

***

வெட்கத்தலம் சுருங்கிய வேளையில்.

மிச்ச நொடிகளை

மோனத்தில்

கழிப்பதில்

தவறில்லைதான்.

முயன்றழித்த

மௌனத்தை

மீட்கும்

பிராயச்சித்தமாகவே

இருந்துவிட்டு போகட்டும்.

சொல்லொன்றை

சிந்தி

சொற்ப நேரத்தையும்

தகித்துச் சோர்ந்த

மனப் பிறழ்விற்குள்

மாட்டிவிடாமல்.

***

முகிழ்ந்ததன் அறம்.

வெம்பிக் கொட்டும்

மாம்பிஞ்சுகளின்

அழுத்தத்தில்

எடுத்துச்சென்ற

முத்தத்தை

பழம் கொட்டும்

நாளிற்குள்

பகிர வருவாயென

நினைக்கிறேன்.

அடியாழ வடுவாக

முகிழ்ந்த பொழுதினை

மூடி மறைக்கும்

நித்திய

துயராக நிலைபெறவிடாமல்.

***

பால்யத்தை பறித்து.

வெடித்த சத்தத்தின்

வெக்கையூடாகவே

விளைவித்தோம்.

வேதனைகள் தாழாது

வியாபாரங்களும்

செய்தோம்.

விழுந்த பிணமெடுத்து

தோண்டிப் புதைத்தோம்

துயரென

துவண்டு.

சிரிக்க மறந்துபோனது

எம்

குழந்தைகள்

முரட்டு மனதிற்குள்

மூழ்கிப் போனதால்.

***

நிகர்செய்திடாத

நித்தியப் பொய்கள்.

அங்கொரு

நீதி

அணுகுண்டுகள்

செய்தது.

இங்கொரு

நீதி

எதிர் குண்டுகள்செய்தது.

வக்காலத்துப் பொய்கள்

வரிந்து கட்டியது.

நடு நிலை

நாடகத்தில்

மெய் தின்று

கொழுத்த

சமரச பொய்களில்

இரத்தம் ஓட்டும் அபகரித்தவனுக்கு

அனுசரனையாக.

சாவதில்

சலிக்கவில்லை

விமோசனம் இருப்பதாக

நம்புவதால்

காவுக் கணக்குகள்

ஏறினாலும்.

மலர்கள் தாவிய

தேனீக்கள்

மகரந்த சேர்க்கையில்

சூழ் கொள்ள

வைத்தது

பிரஞையுடன்

எல்லைக்கோடுகளற்று.

பலிதமாகிடவில்லை

இயல் ஈர்ப்பு

மலிவரசியலில்

மதத்துடன் மாட்டிக்கிடக்கும்

மனிதன்

பித்துப்பிடித்த

பேயெனவானதால்

***

சலனத்தில் சந்தோசித்து.

விழித்திருக்கும்

வேளையில்

வெக்கை சூழுகிறது

போர் நெடியடித்து.

வாடிய

செடிகளைப் பற்றி

சொல்வதற்கு

ஒன்றுமில்லை.

வயிறு

காய்ந்திடும்

தருணத்தில்.

அழாமல் இருக்கவேண்டும்.

இரானுவ வீரர்களுக்கிடையில்

நடந்தழைத்துச் சென்ற

அண்ணணற்று

நாளை நடந்து செல்லும்பொழுது.

உறங்கப் போகும்

இவ்வேளையில்

உடம்பிடம் சொல்ல மட்டும்

ஒன்றிருக்கிறது.

விடியும் பொழுதில்

அழைக்கப்படும்

பெயர்

எதுவாகவும்

இருக்கலாம்

நம்

இணக்க முறிவில்.

மற்றபடி

சோர்ந்திருக்க முடியாது

உங்களைப்போல

மரணத்தை வைத்து

மணித்துளிகளை

யாசிக்கும்

இவனால்.

***

##################################

ஆமாம் தானே.

திட்டமிடாதொரு

முன் கணிப்புகளற்ற

பொழுதுகளில்

நிகழ்ந்திடாதிருக்க

வேண்டும்

நமக்குள்ளான

சந்திப்புகள்

தொடரெனெ.

தாகித்தலையும்

காதலுக்கு

நீயும்

காரணமென்பதை

மறுக்கவியலாதுதான்.

***

ரவி அல்லது

பட்டுக்கோட்டையைச் சார்ந்த ரவிச்சந்திரன் பி.இ., எம்.பி.ஏ ஆகிய கல்வி பட்டங்கள் பெற்றவர். கம்ப்யூட்டர், கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வருபவர். ரவி அல்லது எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *