கொடைக் காலம்              

  முளைப்பாரியின் பச்சையமென சொலித்துக் கிடக்கிறது தெய்வத்தின் பீடம்

கொட்டுக்காரர்களின்  அடிக்கேற்றபடி   உடலசைக்கிறார்கள் ஊர்க்குலவான்கள்

பலிகிடாயைப்பற்றி  பலவந்தமாய் இழுத்துப் போகிறான் நேர்ந்து கொண்டவன்

புழுதிகிளப்பி குதியாளம் போடுகின்றன கட்டவிழ்ந்த சேவற்பிசாசுகள்

திசைகளைத் தீப்பற்றச் செய்கிறது பெண்டுகளின் பெருங்குலவை

,

 ‘அம்மன்

கோயில் கிழக்காலே  .. அன்னவயில் மேற்காலே ….” என  உச்சஸ்தாயில்

உயிர்பிசைகிறார்

 பண்ணைப் புரத்து ராசய்யா

,

 பட்டுச்சேலை சரசரக்க

கல்அடுப்பில் பொங்கலிடும்  கன்னியொருத்தியின் கடைக்கண் பார்வைக் கிட்டிய

காளையொருவனின்  உதடுகள்  “ஊதா கலரு ரிப்பன்  ”  என முணுமுணுக்க

உற்சாகமாய் துவங்குகிறது  உலகளந்தாளின்  உன்னதக்கொடை.

புலரி

———-

குளிருக்கு இதமாய் கைகளை சிக்கிமுக்கியாக்கி உரசுகிறார்

காதுகள் மறைய உருமாக்கட்டி தேநீர்க்கடைக்கு நடக்கும் நடுவயதுக்குடியானவர்

,

தள்ளாதவயதிலும் தலைநீராடி

ஒற்றைநாமத்தை செங்கீற்றென இட்டுக்கொண்டு நாச்சியார் திருமொழி இசைக்கிறாள் மூதாய்களில் ஒருத்தி

தேர்ந்த சித்திரக்காரனின் லாவகத்தோடு  வாசலிட்டக்கோலத்திற்கு பார்த்துப்பார்த்து வண்ணம்தீட்டுகிறாள் வாலைக்குமரி

,

வீரமணி

KJஜேசுதாஸ்

LRஈஸ்வரி

TMசௌந்தர்ராஜன்

சீர்காழி கோவிந்தராஜன்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்

பக்தியிசை தகடுகளால் திருவையாறாகிறது சிற்றூர்

,

காங்கேயம் காளைக்கு நீச்சல் பழக்கி குளத்தில் முங்கியெழுந்து

சிறுவர் சிறுமிகளின் விருப்பத்திற்கிணங்க கமலம் பறித்துக்கொடுப்பவனின் வதனத்தில் ஒளிர்கிறது மார்கழி

பிராது

————————–

வலப்புறமோ

கண்மாய்மண்

விழுங்கும்

இராட்சஷ

பொக்குளின்

இரைச்சல்

,

இடப்புறமோ

இடைவிடாத

தண்டவாள

இரயில்களின்

தடதடப்பு

,

ஊரார் குறைகளுக்கு

“ம்” கொட்டும்

உறக்கம் கெட்ட

வெயிலுகந்தாள்

,

யாரிடம்

முறையிடுவாள்

தன் உளக்குறையை

0

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *