1.கோழிக்குழம்பின் வாசனை
வடபழநி AVM ஸ்டுடியோவுக்கு எதிர்சந்தில் ஒரு பாடாவதி மேன்ஷனில் வசிக்கிற
Mr.X சென்னைப் பெருநகரத்தில் திரைப்பட உதவி இயக்குநராகப்
பணியாற்றுகிறார்
,
ஒரு ஞாயிரன்று மேன்ஷனுக்கு அருகிலுள்ள காரைக்குடி
செட்டிநாடு மெஸ்சிலிருந்து கிளம்பிய கோழிக்குழம்பின் வாசனை அதிகாலையில்
அரைத் தூக்கத்திலிருந்த அவரை கிறங்கடித்து அவரது சொந்த ஊரான
சேடபட்டிக்கு அழைத்துச் சென்றது
,
அதுமாத்திரமில்லாது Mr.பாரதிராஜாவின்
‘பதினாறு வயதினிலே’ படத்திற்கு அழைத்துச் சென்றது
,
வைக்கோல் போர் மீதேறி
கோழி பிடிக்கும் Mr.சப்பாணி(எ) கோபால கிருஷ்ணனையும்- தன் வீட்டுக்
கோழியை களவாடியதாக பக்கத்து வீட்டு பெண்ணோடு சண்டையிடுகிற
Mrs.குருவம்மாளையும்-உடல்நலம் குன்றிய கோழியை கண்ணாடிக் கார
மருத்துவரிடம் எடுத்துச் செல்லும் Miss.மயிலுவையும் அறிமுகப்
படுத்தியது
,
மேலும் அது அவரை சொந்த கிராமத்திலேயே தங்கிவிடும்படியும்
கட்டளையிட்டது
,
அதுசமயம் அடுத்த ஞாயிரன்று முனியாண்டி விலாசில் கொதிக்க
இருக்கும் கோழிக்குழம்பின்வாசனை அதனருகில் மேன்ஷனில் வசிக்கும் Mr.y
மற்றும் Mr.z ஐ கிறங்கடித்து அவர்களது
சொந்த ஊர்களான ஆண்டிபட்டிக்கும் அரசபட்டிக்கும் விரட்டியடிக்கலாம்
,
Mr.பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ ‘கிழக்குச்சீமையிலே’ படங்களுக்கு அழைத்துச்
செல்லலாம்
,
மேலும் அவர்களை அங்கேயே தங்கிவிடும்படியும் கட்டளையிடலாம்
000
2. உறுமியின் குரல்
உறுமியை
வரைந்து
கொண்டிருந்தவனிடமிருந்து
தட்டிப் பறித்த காற்று
மாயவளை குச்சியால்
அதன் தேகம் உரச
பெருவெளியில்
அதிர்ந்ததன் குரல்
“வ்வூ “
“வ்வூ”
3. சில்வண்டுகளின் பாடல்
அய்யனார் கோயில்
கொல்லையில்
,
சோள நாற்று அறுவடை
,
இரைந்து செல்லும்
Indigo வை
இமைக்காது
ஏறிட்டவர்கள்
,
கடைசி வரை
கண்டுகொள்ளவே இல்லை
,
சில் வண்டுகளின் பாடலை
000


