அறை எங்கும் துழாவியாயிற்று
எதிலிருந்து நாற்றம் வருகிறதென்றே தெரியவில்லை
மிகவும் அருகாமையில் உணர்கிறேன்.
கண்களை மூடிய சில போழ்தில்
உள்ளிருந்து நாசி வழியாக
நாற்றம் வெளிவருவதை உணர்ந்தேன்.
,
இந்த வாழ்வு
மரணத்திற்காக மட்டுமே
துடித்துகொண்டிருக்கிறது.
,
அன்பின் போதாமை அல்ல காதல்.
அதே பாதையில் பூத்த
இன்னொரு மலர்.
,
நாய் என்பது நாயே அல்ல.
அது ஒரு மொழிப் படலம்.
மூடி மறைக்கப்பட்ட தினவு..
,
அறிவின் போதாமை
பிரபஞ்ச எல்லையில்
விரல் நழுவி செல்கிறது.
,
கால்கள் எம்மை சுமந்து
சென்ற காலம் போய்
இப்போது கால்களை நாம்.
00

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.