Sale!

வார்டு எண் 208

Original price was: ₹170.00.Current price is: ₹150.00.

காசம் எனும் கொடிய நோயுடனான நெடிய போராட்டத்திற்குப் பிறகு மீண்ட கோமுவின் படைப்புகள் வாழ்வையே பெரும் கொண்டாட்டமெனப் பார்த்து அனைத்தையும் கடந்து செல்கிற மனிதர்களால் ஆனவை. இந்நாவலிலும் தனிமை, மருத்துவமனைச் சூழல், உறவு மோதல் எல்லாவற்றையும் கடந்து கதைசொல்லியிடம் தீராதிருக்கிற எள்ளலைக் கொண்டே இது வா.மு.கோமுவின் படைப்பு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
– கி.ச.திலீபன்

Description

பல வேளைகளில் உடலை நாம் வதைக்கிறோம். அதனை உடல் பொறுத்தருள்கிறது. ஒரு கட்டத்தில் அது நம்மை வதைக்கத் தொடங்கும்போது நமது அஷ்ட நாடிகளும் கலங்கி விடுகின்றன. இன்றைக்கு மனித வாழ்வே உடலுடன் தொடுக்கும் போராகத்தான் இருக்கிற நிலையில் வா.மு.கோமு தன் உடலுடன் நிகழ்த்திய சிறு யுத்தத்தை இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார். கூடவே உறவுகளுடனான போரும் உள்ளடங்கியிருக்கின்றன.