உற்றுப் பார் “.  .

என்னை நான் நேசிப்பதை விட

உன்னால் தான்

அதிகம்

நேசிக்கப்படுகிறேன்

நான் விழித்திருக்கையில்

மட்டுமல்ல

தூங்கும் போதும்

துல்லியமாக கவனிக்கிறாய்

என் விழிகளையும்

என் செவிகளையும்

என் நாசி துவாரங்களையும்

என் வாயையும்

நிழலாய் தொடருகிறாய்

உன் தேடலுக்கு

போதுமானதாக இருக்கிறது நிமிடத்தில் மலர்ந்து

நிமிடத்தில் உதிர்கிற

நிமிட சந்தோசம்

அதை என்னிலிருந்து

பெறுவதற்காகவே

என் பின்னே வருகிறாய்

பரம இரகசியமாக

என்னை எட்டிப்பார்க்கும்

பல பொழுதுகளில்

ஒரு பொழுதிலாவது

சக மனிதா

உன்னை நீ உற்றுப் பார்

அதிர்ந்து விடுவாய்

மௌனமாக வெளிப்படும்

உன்னை சூழ்ந்திருக்கும்

பல புன்னகைகள்.

++

ஐ.தர்மசிங்

நான் ” இலையளவு நிழல்” ” புன்னகையின் நிறங்கள்” ஆகிய இரு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *