சீவகன் கவிதைகள்

1.  கடவுள்

வெட்கம் கெட்ட கடவுள்

எங்கும்

எதிலும் இருக்கிறார்

உடைகளைக் களைய

கொஞ்சம்

கூச்சமாகத்தான்  இருக்கிறது.

2. மரியாதைக்குரிய கடவுள்

எப்போதும் போல்

தியானத்தின் பெயரில் 

துயிலும் கடவுளார்

எதற்கும்

செவிக் கொடுக்கமாட்டார்

நீ தேவிடியா பயலே

என்றாலும்கூட.

3.  உரையாடல்

எம்பெருமான்

சக்தியுடன் கலவி கொண்டிருக்கிறார்

வேண்டிய வரத்தை என்னிடம் கேளும்

என்றான் கடவுளின் சீடன்

,

நான் சக்தியை

அடைய வேணும்

முதலில்

உண்ண சோறு போடுமய்யா.

4.  அவன் செயல்

எங்கு தேடியும்

அகப்படாத

சிவலிங்கம் பிள்ளை

வீணையின் நரம்பில்

மதுவோடு

அமர்ந்திருப்பதாகச்

சொன்னார்கள்

தெருவின் முச்சந்தி

குழாயடியில்

சக்காளத்தி சண்டையில்

தலைவிரித்து

ஆடிக் கொண்டிருந்தாள்

பராசக்தி

,

நாறின குடும்பத்தில்

பிறந்ததெண்ணி

நோஞ்சான் குமராண்டி

சில்வர் தட்டில்

தண்டோர

அடிக்கலானான்

யாமிருக்க பயமேன்.

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *