மழை பெய்த இரவு

பொன் மாலை பொழுதை

கடந்த கரிய இரவு

மழைக்கு இடம் கொடுத்தது

,

மழை முழங்கி பெய்தது

தெரு விளக்கு எரிந்தது

,

மழை சாரல் துளிகள்

மேலிருந்து கீழே இறங்குவதை

விழிகளால் பார்க்க முடிந்தது

,

சத்தத்தை கேட்க முடிந்தது

,

நனைந்து ஓடிய துளிகள்

ஓரமாக ஒதுங்க முடியாமல்

தவித்து நிலத்தில் குதித்து

மண்ணுடன் இணங்கி கலந்து

,

நிறம் அற்ற மழை

நிறம் பெற்று கொண்டு

புதிய உருவம் அடைந்து

ஆழமாக அமைதிக்கு சென்றது

,

பக்கங்கள் பறந்த பொழுது

மழையோ வீசும் புயலோ

அல்லது வெறும் காற்றோ

,

பூக்கள் பூத்து அசையும்

மர ஜன்னல் கதவுகள்

விலகி இரண்டாக பிரிந்தும்

சேர்ந்தும் சட்டத்துடன் விளையாடியது

,

நீண்ட மேஜை மீது

ஒட்டி படுத்திருந்த புத்தகங்கள்

புறாக்கள் ரெக்கை விரித்து

பட படப்பது போன்று

பக்கங்களை முன்னும் பின்னும்

அலைய விட்டு ஆழ்ந்து

வாசித்து கொண்டு இருந்தன

,

எந்த சிந்தனை மேலெழுந்து

உயரமாக பறக்க போகிறதோ

என்ன மாற்றம் வருமோ

0

சோழன்

சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பூபாளம், நடுகல், சொல்வனம், மயிர் மற்றும் காற்றுவெளி இணைய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன.  சொல்வனம், மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *