மழை பெய்த இரவு
பொன் மாலை பொழுதை
கடந்த கரிய இரவு
மழைக்கு இடம் கொடுத்தது
,
மழை முழங்கி பெய்தது
தெரு விளக்கு எரிந்தது
,
மழை சாரல் துளிகள்
மேலிருந்து கீழே இறங்குவதை
விழிகளால் பார்க்க முடிந்தது
,
சத்தத்தை கேட்க முடிந்தது
,
நனைந்து ஓடிய துளிகள்
ஓரமாக ஒதுங்க முடியாமல்
தவித்து நிலத்தில் குதித்து
மண்ணுடன் இணங்கி கலந்து
,
நிறம் அற்ற மழை
நிறம் பெற்று கொண்டு
புதிய உருவம் அடைந்து
ஆழமாக அமைதிக்கு சென்றது
,
பக்கங்கள் பறந்த பொழுது
மழையோ வீசும் புயலோ
அல்லது வெறும் காற்றோ
,
பூக்கள் பூத்து அசையும்
மர ஜன்னல் கதவுகள்
விலகி இரண்டாக பிரிந்தும்
சேர்ந்தும் சட்டத்துடன் விளையாடியது
,
நீண்ட மேஜை மீது
ஒட்டி படுத்திருந்த புத்தகங்கள்
புறாக்கள் ரெக்கை விரித்து
பட படப்பது போன்று
பக்கங்களை முன்னும் பின்னும்
அலைய விட்டு ஆழ்ந்து
வாசித்து கொண்டு இருந்தன
,
எந்த சிந்தனை மேலெழுந்து
உயரமாக பறக்க போகிறதோ
என்ன மாற்றம் வருமோ
0

சோழன்
சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பூபாளம், நடுகல், சொல்வனம், மயிர் மற்றும் காற்றுவெளி இணைய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம், மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.