சிற்றோடைகளில்
வெண்நாரைகளின்
அலகு பாய்ச்சலில்
இரை வேட்டை
,
ஒற்றைக்காலில்
தென்னம்
ஈர்க்குச்சி காலில்
பெருந்தவம்
,
ஒரே குத்தில்
பசிக்கான
ஓடும் மீன்
அதன் வயிற்றில்
,
வலைவிரித்த
வேடுவனின்
வீச்சில்
இறுகக்கட்டிய
வகைவகையான
துள்ளல்மீன் கூட்டம்
,
இடுப்புவேட்டியவிழ்த்து
ஓடும் நீரில்
எதிர்ப்படும் கூட்டம்
தானாக சிக்கி
மனித உணவாகும்
,
வெகுநேரம்
பல தூண்டிலில்களில்
அரிசிப்பொரி குத்தி
வேட்டையனாக
அமர்ந்தேன்
,
வெறும் தூண்டில்களில்
மீன்சிக்காது
நீரில் நின்ற விரல்களில்
என்கால்களில்
தனது அலகால் குத்தி
சிரித்த
நகைப்புசப்தம்
கனவென்று
கலைந்தது.
000

இ.செல்வராஜ்.இயற்பெயர். புனைப்பெயர் சூர்யமித்திரன். 1983 முதல் எழுதி வருகிறேன்
பல கவிதைகள் வெளிவந்துள்ளது. படைப்புகுழுமத்தின் கல்வெட்டு,கொலுசு,காற்று வெளி, நடுகல், தளம்,கணையாழி, சொல்வனம்/ஆனந்தவிகடன் காமதேனு நிழற் சாலை. இப்படியாக நிறைய இணைய இதழ்களில் கவிதை வெளிவந்துள்ளது.