நூலிழையும் தான்..

நூறு மைலும் தான்..

நிகழ்வுகளின்

இடைப்பட்ட தூரத்தின் கணித அளவுகள் மறைந்து

வேறு பரிமாணம் கொள்கிறது காலம்.

,

கசாப்புக்கடை  சமூகத்தில்

பாலகனின் நெஞ்சம் கீறி

விதைக்கப்படும்

நல் ஒழுக்க

கட்டுப்பாட்டு விதைகள்.

,

பாதங்களில் நெருப்பு

பற்றிக்கொள்ள

மொத்த உடலும் மேலெழும்பிச்

செல்ல ஆயத்தமாகிறது.

,

இந்த புதிர் பயணத்தில்

முடிவைத் தேடுவதே அபத்தம்..

,

தடாகத்தில் மிதக்கும் உதடுகள்

பூ மொட்டுக்களை உமிழ்ந்தவாறு

நித்தம் கமழும் மணத்துடன்..

தேங்கிய குட்டை நீரில்

வெளி தள்ளிய நாவின் பிம்பம்

தீரா தாகத்துடன்

பிறிதொன்றின் வடிவம்..

,

எல்லா உணவும்

மலமாகத்தான் மாறும்..

எல்லா உடலும்

பிணமாகத்தான் மாறும்..

,

வாழ்த்துக்களில் மிதக்கும்

உள்ளீடற்ற  மனங்கள்.

காலை எழுந்தவுடன் கவிதை

பின்பு தான் எல்லாம்…

,

எனக்கு நான் தான் பிரம்மாண்டம்.

எண்ணற்ற துகள்களின் சுழற்சி

எல்லையற்ற உள் வெளியில்..

மூடிய இமைகளுக்குள்

விரியும் அக உலகம்..

,

கவிதையாகவே சிந்திப்பதாக

சொன்ன கவிஞன்

உணர்வின் கூர்மையில்

தன்னையே கிழித்துக் கொண்டு

மாண்டு போனான்.

000

சுரேசுகுமாரன்

இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *