நான்காவது
தடவையான
முயற்சி
–
புரோக்கர் மாமாவின்
சொதப்பல் பாகம் நான்கு
–
இளவயது கழித்தல்
சிறுநீர் போல அல்ல
சாமி படம் போட்டு
இங்கு சிறுநீர் கழிக்காதீர்
–
இப்போதெல்லாம்
அதுவும் போகமுடியாது
–
சக்கரை இனிக்கிற சக்கரை
அக்கரை அங்கன எங்கே
அக்கரைன்னு சொல்றாப்பல
–
நீர் தெளித்து கோலம் போட்டு
இந்து சாமிகளுக்கு
கதம்பம் கொத்து செருகிடறாப்பல
–
மொத கிராக்கி
பிரேக் இல்லாத வண்டிக்கு
–
அடுத்தது
கறுப்பு காமாக்னிங்க
–
மூணாவது
திருநங்கை சாலினி ங்க
–
நாலாவது
உடலெங்கும் முகமெங்கும்
மருக்கள் பூத்த
பெண் பிருந்தாவன் ங்க
–
என்
இளமையெனும்
பூங்காற்று
சூறாவளிக்கு
பிறந்ததோ
–
புரோக்கரைத் துரத்துகிறேன்
என் ஏமாற்ற கற்பு கழியாத
பருவத்தோற்றலின்
கன்னி கதை எண்ணி.
++

சூர்யமித்திரன்
இ.செல்வராஜ் இயற்பெயர். 1983 முதல் எழுதி வருகிறார். படைப்புகுழுமத்தின் கல்வெட்டு,கொலுசு,காற்று வெளி,தளம்,கணையாழி, நடுகல்.
சொல்வனம்/ஆனந்தவிகடன், காமதேனு நிழற் சாலை..
இப்படியாக நிறைய இணைய இதழ்களில் கவிதை வெளிவந்துள்ளது.