நான்காவது

தடவையான

முயற்சி

புரோக்கர் மாமாவின்

சொதப்பல் பாகம் நான்கு

இளவயது கழித்தல்

சிறுநீர் போல அல்ல

சாமி படம் போட்டு

இங்கு சிறுநீர் கழிக்காதீர்‌

இப்போதெல்லாம்

அதுவும் போகமுடியாது

சக்கரை இனிக்கிற சக்கரை

அக்கரை அங்கன எங்கே

‌அக்கரைன்னு சொல்றாப்பல

நீர் தெளித்து கோலம் போட்டு

இந்து சாமிகளுக்கு

கதம்பம் கொத்து செருகிடறாப்பல‌

மொத கிராக்கி

பிரேக் இல்லாத வண்டிக்கு

அடுத்தது

கறுப்பு காமாக்னிங்க

மூணாவது

திருநங்கை சாலினி ங்க

நாலாவது

உடலெங்கும் முகமெங்கும்

மருக்கள் பூத்த

பெண் பிருந்தாவன் ங்க

என்

இளமையெனும்

பூங்காற்று

சூறாவளிக்கு‌

பிறந்ததோ

புரோக்கரைத் துரத்துகிறேன்

என் ஏமாற்ற கற்பு கழியாத

பருவத்தோற்றலின்

கன்னி கதை எண்ணி.

++

சூர்யமித்திரன்

இ.செல்வராஜ் இயற்பெயர். 1983 முதல் எழுதி வருகிறார். படைப்புகுழுமத்தின் கல்வெட்டு,கொலுசு,காற்று வெளி,தளம்,கணையாழி, நடுகல்.

சொல்வனம்/ஆனந்தவிகடன், காமதேனு நிழற் சாலை..

இப்படியாக நிறைய இணைய இதழ்களில் கவிதை வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *