1.முற்றம்

கோரப்பாய்கள் விரித்து

அம்மா அப்பா

அண்ணன் தம்பி

அக்கா தங்கையென்று

அனைவரும் நிலவை ரசித்து

கழிந்த முற்றம்

,

ஆடு மாடு

கோழியென்று

கட்டிப்போட்டும்

அடைத்தும்

வாழ்ந்த முற்றம்

,

தெருவிளக்கு வெளிச்சத்தில்

“ஒரு குடம் தண்ணியெடுத்து”

பாடல் பாடி

விளையாண்டு

களித்த முற்றம்

,

பெரிய வட்டமிட்டு

கோலிக்குண்டுகளை

வரிசைப்படுத்தி கட்டி

அடித்து விளையாடி

மகிழ்ந்த முற்றம்

,

அதிகாலையில்

சாணம் தெளித்து

நோய்த் தொற்றை

விரட்டிய முற்றம்

,

மார்கழித் தையில்

அக்கா தங்கையென்று

வரைந்த பல கோலங்களை

சுமந்த முற்றம்

,

இப்படிப் பலவற்றை

கண்ட முற்றம்

இப்போது கிராமங்களில்

அரிதாகிப்போனதென்

காரணமென்ன ?

                     ***

2.கிராம மாற்றம்

கண்மாய் நீரில்

துள்ளிக் குதித்து

விளையாடிடும் மீன்கள்

,

நீர் மேற்பரப்பின் மீது

இரை தேடிடும்

நாரைகளின் சப்தங்கள்

,

கரைகளின் ஓரங்களில்

மண்ணைத் துளைத்துக்

கொண்டிருக்கும் நண்டுகள்

,

கரைகளைச் சுற்றிலும்

காவல்காரனாய் அமைந்திருக்கும்

பனை மரங்கள்

,

மடையின் மேலிருந்து

சுழன்று குதித்து

குளித்திடும் சிறுவன்

,

நடு மடையிலிருந்து

திறந்து விடப்படும் நீரில்

துணிகள் துவைத்திடும் மக்கள்

,

கால்வாயின் வழியே

பாய்ந்தோடும் நீரை

வாரியணைத்து நெற்பயிருக்கு

தண்ணீர் பாய்ச்சிடும் விவசாயி

,

அறுவடை செய்த

நெற்பயிரை அடித்து

நெல்மணிகள் எடுப்பதற்கு

அமைக்கப்பட்ட நெற்களம்

,

வண்டிமாடு கட்டி

மூட்டை மூட்டையாய்

ஏற்றிச் செல்லும்

நெல் மூட்டைகள்

,

இவையனைத்தும்

காலத்தின் மாற்றத்தால்

நலிந்து போனதா – இல்லை

கால நிலையின் மாற்றத்தால்

சரிந்து போனதா ?

,

என் கிராமத்தில்…!

000

தொலைந்து மீண்டவன் மற்றும் மௌனத்தின் உரிமைக்குரல் என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *