எழுதுவதற்கு ஏதுமில்லை

எல்லாமே எழுதிவிட்டார்கள் என்றார்

இன்னும் மிச்சமாய் இந்த வாழ்க்கை இருக்கிறதே என்றேன்

=

நடிக்கச் சொன்னால்

வேண்டாமென்று

நிழல்கூட

வெட்கப்படுமளவிற்கு

இருக்கிறது அவன்

நிஜ வாழ்க்கை

=

நண்பரிடம் கேட்டேன்

மனைவியிடம் கேட்டேன்

உறவினரிடம் கேட்டேன்

சாமியிடம் கேட்டேன்

விடையேதும் கிடைக்கவில்லை

சற்று நேரம்

கண்மூடி

என்னிடமே கேட்டேன்

உரசியதும் எதிரே நிற்கும் பூதமாக

உடனே கிடைத்தது

எனக்கான பதில்

=

பணமும் சாதியும் தான்

பல்லை இளிக்கின்றன

பட்டியல்களிலெல்லாம்

=

காலடி சத்தத்தில்

வால் சுருட்டி அமரும் நாய்க்குட்டியாக

புத்தகத்துடன் பதுங்குவோம்

அப்பாவுடன் விளையாடியது

அரிதுதான்

=

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *