முகமறியா பறவை ஒன்றின்

செல்லரித்த  கூடு.

கூட்டுண்ணிகள் ஒவ்வொன்றாய் மாயமாகிப் போன துக்கத்தில்

காலம் மறந்து முடங்கிப் போனது.

வெளிச்சம் இருள்

பேதமின்றி த்யான நிலையில்

பெருங்காற்றின் வரவுக்காய் காத்திருப்பு.

0

மௌனத்தின் ஆழத்தில்

வலியின் நுனியை

ருசித்தவாறு

பெருங்காலம் கடந்து செல்லும்

0

உதைபட்ட பந்தின் வீரியம்

இடைநிற்றலில்

உள்ளார்ந்து சுழன்று

தூர அலகு மறைந்து

மைய்யமற்ற மையத்தில்

இணைந்து கரையும்.

0

விதியின் பாய்ச்சலில்

முடிவற்று புனரமைக்கப்படும்

காமக் கூடாரங்கள்.

0

தண்டவாளங்கள் பிரிந்து

இரண்டாக மூன்றாக

பயணித்தாலும்

மீண்டும் சில நேரும்

ஒன்றிணைந்து பயணிக்க கூடும்.

0

பழுத்து உதிர காத்திருக்கும்

கண் மலர்கள்..

 வெற்றிலை நரம்புகள் புடைக்க  

காய்ந்த  வரட்டியென

நொறுங்க கிடக்கும் இதயம்..

00

சுரேசுகுமாரன்

இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *