கர்ப்பக் கிரகத்துக்குள்

கலவி புரிந்தார்கள்

சாமி வரவில்லை

,

கோவிலுக்குள்ளே வைத்து

நாசம் செய்தார்கள்

சாமி வரவில்லை

,

கற்பழித்து இறந்த உடலை

கோவில் வளாகத்திற்குள்ளயே

புதைத்தார்கள்

அப்போதும் கூட

சாமி வரவில்லை

,

செவ்வாய் வெள்ளியென

கோவிலைச் சுற்றும்

இளம் பெண்களும்

இரவுப் பொழுதில்

தனிமையில்

சென்று வருகையில்

வன்புணர்வு செய்யப்பட்டார்கள்

அப்போதும் அவர்களுக்காக

சாமி வரவேயில்லை

,

இவற்றிற்கெல்லாம்

வராத சாமியா

பூஜை புனஸ்காரம் செய்து

மேள தாள சத்தங்கள்

கேட்டதும்

வந்து விடுகிறது.

                                              ***

சனாதனத்தை எதிர்த்ததால்

இந்து மதத்தை

புறக்கணிப்பதாக சொன்னீர்கள்

,

மாட்டுக்கறி தின்று

உடம்பை வளர்க்கும்

மாட்டுப்பய கூட்டம்

என்றும் கூறினீர்கள்

,

கொலை கொள்ளையென்றால்

சேரிக்காரன் தான் என்று

பட்டம் சூட்டுனீர்கள்

கடவுளே இல்லையென்றால்

நாத்திகன் நாட்டுக்கே

ஆகாதென்றீர்கள்

,

படித்து பட்டம் பெற்று

அதிகாரப் பதவியில்

வந்தமர்ந்தால்

இட ஒதுக்கீட்டில்

வந்தவனென்றீர்கள்

,

அடிபட்டு வலியால்

துடித்தவன்

தன் வலியை சொன்னால்

அவனை சாதி

வெறியனென்றீர்கள்

,

சமத்துவம் கடை பிடிக்க

சாதி மதமின்றி

காதலித்தால் அதை

நாடகக் காதலென்றீர்கள்

,

அதையும் மீறி காதலித்தால்

ஆணவக்கொலையும்

செய்தீர்கள்

இப்போது,

.

,.

இப்போது,

.

.

உங்களுக்கு ஆயுதமேதுமில்லை

,

ஆகையால்,

எங்களை நாங்களே கொன்றதாக

சினிமாவில் சித்தரிக்கிறீர்கள்

,

உங்கள் கைகளையும்

உங்கள் தலைகளையும்

நீங்களே வெட்டி

சாய்த்து விடுவீர்களென்றால்

,

அப்போது,

நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்

அதுவும் உங்களுக்காக…

,

ஆனால்,

.

.

ஆனால்,

.

.,

தர்மம் ஒருபோதும்

தலை குனியாது !

                                           ***

வெளியூர் வேலைக்கு

சென்றிருந்தேன்

,

சிலபேர் என்னிடம்

எந்த மாவட்டம் என்றார்கள்

கூறினேன்

,

எந்த ஊரென்றார்கள்

கிராமமென்பதால்

அருகிலிருக்கும்

ஊர் பெயரைக் கூறினேன்

,

அந்த ஊர் தானா ?

இல்லை வேறெதும் ஊரா

என்றார்கள்

எனது ஊர் பெயரைக் கூறினேன்

,

அந்த ஊரில் எந்த தெரு

என்றார்கள்

அதற்கும் பதிலளித்தேன்

,

இப்போது ஓரளவு

தெரிந்திருக்கும் அவர்களுக்கு

நான் யாரென்று !

,

அதை உறுதி

செய்து கொள்ள

மீண்டுமொரு கேள்வி

,

ஒருவரின் பெயரை உச்சரித்து

அவரை உனக்குத் தெரியுமா

என்றார்கள்

ஆமாம் என்று பதிலுரைத்தேன்

,

அவர் உனக்கு என்ன

வேண்டுமென்றார்கள்

அவரை எனக்குத் தெரியுமென்றே

விடை கூறினேன்

,

இப்போது அவர்களுக்கு

உறுதியாக தெரிந்திருக்கும்

நான் யாரென்றும்

என்ன சாதியென்றும்…

                                                  ***

இன்னும் எப்படித்தான்

நீயிங்கு

வாழ்ந்து கொண்டிருக்கிறாய்

,

நம் காதலை சாகடித்த

இவ்வுலகத்தை விட்டு

நான் நிம்மதியாய்

இடம் பெயர்ந்து விட்டேன்

,

நானில்லாத இவ்வுலகில்

உன்னால் வாழ இயலாது

என்றுரைத்தாய்

,

இந்தக் காதலில்

ஒரு நாளேனும்

உன்னுடன் வாழ்ந்தால்

என் வாழ்நாள் முழுவதும்

வாழ்தலுக்கு சமமென்றாய்

,

ஆனால்

இச்சமூகம்

சாதியென்றொரு போர்வையில்

உன்னையும் என்னையும்

பிரித்து வைத்து

நம் காதலை சாகடிக்கும்

,

அதில்

பலி கிடாவாக

என்னையும்

பலி கொடுக்கும்

,

நானில்லையென்றால்

இவ்வுலகில்

நீயெப்படி வாழ்வாய்

,

அதற்காகவே

விட்டுச் செல்கிறேன் – இங்கு

எனது மூச்சை

,

அது

உன்னையே என்றும்

சுற்றி வரும்

,

அதில் நீ

வாழ்ந்து கொள்

என் காதலே…

                                                    ***

கண்ணன்.க,

“தொலைந்து மீண்டவன்” மற்றும் “மௌனத்தின் உரிமைக்குரல்” என இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *