ஏனோ

கரைந்துகொண்டே இருக்கிறது காகம்

,

ரீல்களின் கானா சங்கீதம்

மீண்டும் மீண்டும்

ஒலிக்க

தூங்கியகுழந்தையின்

கைகளில் காட்சிநகர்ந்து

,

சருகுகளின்

சரசரவில்

மஞ்சள் மைனாவின்

தோள்குலுக்கிய நடை

இப்படியும் அப்படியும்

என்ன தேடலோ

,

கழிவுநீர்த் தேக்க

தொட்டி மூடியோரம்

எகிறி உள்புகும்

அரைமில்லி இரைபூச்சிக்கு

காத்திருக்கும் கொக்கு

,

மீண்டும் மீண்டும் முயற்ச்சித்தும்

கரையோரம்

ஊடலில் கழற்றிப் போட்ட

கள்ளத்தாலியை

கைப்பற்றவே முடியவில்லை

அலைகளால்.

,

புரிய முயற்ச்சிக்கிற

சங்கதிகளின்

சங்கிலித்தொடரில்

ஏனோ நகருது

பிடிபடா வாழ்க்கை.

0

சூர்யமித்திரன்

இ.செல்வராஜ்.இயற்பெயர். புனைப்பெயர் சூர்யமித்திரன். 1983 முதல் எழுதி வருகிறேன். படைப்புகுழுமத்தின் கல்வெட்டு,கொலுசு,காற்று வெளி, நடுகல், தளம்,கணையாழி, சொல்வனம்/ஆனந்தவிகடன் காமதேனு நிழற் சாலை. இப்படியாக நிறைய இணைய இதழ்களில் கவிதை வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *