ஏனோ
கரைந்துகொண்டே இருக்கிறது காகம்
,
ரீல்களின் கானா சங்கீதம்
மீண்டும் மீண்டும்
ஒலிக்க
தூங்கியகுழந்தையின்
கைகளில் காட்சிநகர்ந்து
,
சருகுகளின்
சரசரவில்
மஞ்சள் மைனாவின்
தோள்குலுக்கிய நடை
இப்படியும் அப்படியும்
என்ன தேடலோ
,
கழிவுநீர்த் தேக்க
தொட்டி மூடியோரம்
எகிறி உள்புகும்
அரைமில்லி இரைபூச்சிக்கு
காத்திருக்கும் கொக்கு
,
மீண்டும் மீண்டும் முயற்ச்சித்தும்
கரையோரம்
ஊடலில் கழற்றிப் போட்ட
கள்ளத்தாலியை
கைப்பற்றவே முடியவில்லை
அலைகளால்.
,
புரிய முயற்ச்சிக்கிற
சங்கதிகளின்
சங்கிலித்தொடரில்
ஏனோ நகருது
பிடிபடா வாழ்க்கை.
0

சூர்யமித்திரன்
இ.செல்வராஜ்.இயற்பெயர். புனைப்பெயர் சூர்யமித்திரன். 1983 முதல் எழுதி வருகிறேன். படைப்புகுழுமத்தின் கல்வெட்டு,கொலுசு,காற்று வெளி, நடுகல், தளம்,கணையாழி, சொல்வனம்/ஆனந்தவிகடன் காமதேனு நிழற் சாலை. இப்படியாக நிறைய இணைய இதழ்களில் கவிதை வெளிவந்துள்ளது.