சூர்யமித்திரன்
அந்தக்காலத்து
மண்சுவற்றின்
விட்டமேறும் ஊர்வன
,
கான்க்ரீட் சுவற்றிலும்
வழுவழுவென வழுக்கும்
டைல்ஸ் சதுரங்களிலும்
உலாவும்
,
விட்டத்து சுவற்றிலும்
தலைகீழ் ஒட்டுதலில்
பயணிக்கும்
இரைதேடி
,
இந்த இனத்துக்கு
கௌலி என்கிற பல்லி
நாமகரணம் சூட்டியவர்
எவரோ
,
வாயில் இரும்புகேட்
மரக்கதவின் சந்து
மௌனமாய்
இரைக்குக்காத்திருந்த
,
கணங்களில்
மூடி திறக்க
திறக்கமூட
பண்ணும்போது
வாலறுந்து வீழும்
கத்துதல் ஏதுமின்றி
,
கடவுளின் மனசாட்சி
நம் உரையாடலின்
குறுக்கீடாய் சமிக்ஞை
சப்தம்
,
கௌலியே சொல்லிடிச்சு
கமல் வசனம்போல
,
பத்திரிகை தலைப்பாக
சாம்பாரில் பல்லி
சாப்பிட்டவர்கள் மயக்கம்
,
பஞ்சாங்க பலன்கள் போல
பல்லிவிழும் பலன்களும்
நம்மை பயமுறுத்தும்
,
இடதுபக்கம் உறுப்புகளில்
மேல் விழுந்தால் அதிர்ஷடம்
வலதுபக்கம்
நாசம் மோசம்
,
தலை மரணம்
தோள்.. இப்படியான
சாஸ்திரம்
,
புணரும் கணங்களில்
பாகத்தில் பக்கவாட்டுகளில்
விழுந்தால் பலன் என்ன
என்று பகுத்தறிவாளர்
வினவினால்
ஓடிவிடத்தான் வேண்டும்.
00

சூர்யமித்திரன் .
கவிதை சிறுகதை கட்டுரை என பல்வேறு சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் நாற்பத்திநான்கு ஆண்டாக எழுதிவருகிறார். சூர்யமித்திரன் . கவிதை சிறுகதை கட்டுரை என பல்வேறு சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் நாற்பத்திநான்கு ஆண்டாக எழுதிவருகிறார்.

